மனித குலம் நகரத்தின் இணக்க வளர்ச்சியை கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
உலகப் பொருட்காட்சியை வெற்றிகரமாக நடத்தியமை, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு பணியை முன்னேற்றும் சீனாவின் நம்பிக்கையையும் மன உறுதியையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது என்று வென்ச்சியாபாவ் தெரிவித்தார். அமைதி வளர்ச்சி மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையில் சீனா உறுதிபட நின்று, பல்வேறு நாடுகளின் சிறந்த நாகரிக அனுபவங்களைக் கற்றுக்கொண்டு பயன்படுத்தி, அவற்றுடனான ஒன்றுக்கொன்று பயனளிக்கும் ஒத்துழைப்பை ஆழமாக்கும் என்றும் அவர் கூறினார்.