ஐ.நா. தலைமைச் செயலாளர் பான் கிமூன், சர்வதேச கண்காட்சி ஆணையத்தின் தலைமைச் செயலாளர் Vicente Gonzalez Loscertales ஆகியோர் இத்துவக்க விழாவில் வெற்றிகரமாக நடைபெற்ற ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை வெகுவாக பாராட்டினர். பான் கிமூன் கூறியதாவது—
"அனைவரும் அறிந்தவாறு, தற்போதைய நகரம் மாபெரும் அறைகூவல் மற்றும் கட்டாயங்களை எதிர்நோக்குகிறது. சீனாவின் 2010ஆம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அரிய கருத்துக்களை நமக்கு வெளிப்படுத்தி, இத்தகைய சவால்களைச் சமாளிப்பதில் நமக்கு உதவியளித்துள்ளது" என்று கூறினார்.
ஞாயிறு பிற்பகல் நிறைவுற்ற இவ்வுச்சி கருத்தரங்கில் ஷாங்காய் அறிக்கை வெளியிடப்பட்டது. நகரத்தின் தொடரவல்ல வளர்ச்சி பற்றி ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொண்ட பல்வேறு தரப்புகள் உருவாக்கிய ஒத்த கருத்து இடம்பெறும் இவ்வறிக்கை, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பெற்றுள்ள முக்கிய சாதனைகளை வெளிப்படுத்துகிறது.