இங்குள்ள தூய்மையான நீர், எனது மனதில் மிகவும் ஆழமாக பதிந்துள்ளது. 1966ம் ஆண்டு நான் யுன்னான் மாநிலத்தில் dianchi ஏரியை பார்வையிட்டேன். அப்போது நான் பார்த்த நீரும் இப்படியே தூய்மையாக இருந்தது. இங்குள்ள நீர் சீராக தூய்மையாக பாதுகாக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன் என்றார் அவர்.
இயற்கைக்காட்சி தவிர, தாலீ நகரின் வரலாறு மேலும் சுவைக்கத்த்தக்கது. நகரத்தின் உயரமான சுவரும் வாயில் கோபுரமும் இங்கு நிமிர்ந்து நிற்கின்றன. வீடுகள் அமைதியாக உள்ளன. ஆற்று நீர் ஓடி கொண்டிருகின்றது. தொடர்ந்து இங்கு வருகின்ற சுற்றுலாப் பயணியர் இந்நகரத்தின் உயர் ஆற்றலை வெளிப்படுத்துக்கின்றனர்.
பாரம்பரிய பண்பாட்டு சூழ்நிலையை தவிர, தாலீ நகரில் வெளிநாட்டு உணவகங்கள், காப்பியகங்கள் முதலியவையும் வரவேற்கப்படுகின்றன. நேபாளத்திலிருந்து வந்த மாணவர் குமார் ரோஷன் ஜா, இங்கு மருத்துவம் கற்று வருகிறார். நேரம் இருந்தால் அவர் தாலீ நகரத்தை சுற்றி பார்கிறார். பழைய நகரத்தின் நீண்ட வரலாற்றை உணர்ந்து கொள்கிறார்.