இத்துறவியர்மடத்தில் அதிக மதிப்புக்குரிய தொல்பொருட்கள் சேமிக்கப்பட்டன. அவை பெரும்பாலும் சீராக பாதுகாக்கப்பட்டன. தற்போது, முக்கிய மண்டபத்தின் வெளியில் அமைந்துள்ள ஜியாங்பூ கோயில் நிறுவப்பட்ட நினைவு கற்சானம், சுமார் இரண்டரை மீட்டர் உயரமும் அரை மீட்டர் அகலமும் கொண்டது. அதில் பழங்கால திபெத் மொழிச் சொற்கள் செதுக்கப்பட்டன. துபொ வம்சத்தின் அரசியல், பொருளாதாரம், மதம் முதலியவற்றின் ஆராய்ச்சி தொடர்பாக அதற்கு முக்கிய மதிப்பு உண்டு.