தவிரவும், அங்கு பல அரிய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புனிதமான பொருட்களும் பேணிகாக்கப்பட்டன. பல தலைமுறை மதத் தலைவர்களின் அஸ்திகளை வைத்து வணக்கம் செய்கின்ற கோபுரங்கள் இங்கு உள்ளன. மத நம்பிக்கை கொண்டவர்கள் பலர் அடிக்கடி அக்கோபுரங்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்கின்றனர். திபெத் சந்திரநாட்காட்டியின்படி ஏப்ரல் 11ம் நாள், இத்துறவியர்மடத்தில் 3 நாட்கள் மத நடவடிக்கை நடைபெறுகிறது. பத்தாயிரம் பேர் இங்குவந்து நடவடிக்கையைப் பார்வையிடுகின்றனர்.