• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சாம்யெ துறவியர்மடம்
  2012-08-03 15:11:11  cri எழுத்தின் அளவு:  A A A   

அது கட்டிமுடிக்கப்பட்ட பின், துபொ மன்னர் ட்ரிசோங் டெட்சென், இந்தியா, சீன ஹான் இனம் மற்றும் பழங்கால சின்ச்சியங் ஆகிய இடங்களின் துறவியர்களை அழைத்து இங்கு வந்து திருமறை ஓதி பரப்புரை செய்தார். அதே காலத்தில், சில உயர் குடி மக்கள், திபெத்தின் முதலாவது தொகுதி கோயிலில் வசிக்கின்ற துறவியர்களாக மாறினர். எனவே சாம்யெ துறவியர்மடம், திபெத்தின் முதலாவது துறவியர்மடமாகக் கூறப்படுகிறது.

இதில் மண்டபங்களும் கோபுரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன. அழகான துல்லியமான ஓவியங்கள், மர சதுக்கங்கள், கற் சிற்பங்கள், தாங்கா எனும் திபெத் சிறப்பு வாய்ந்த மத ஓவியங்கள் முதலியவையும் காணப்படுகின்றன. வூசி மாமண்டபத்தின் நிலப்பரப்பு சுமார் 6000 சதுரமீட்டர்.

இத்துறவியர்மடத்தில், துபொ வம்சம் முதல் திபெத்தின் பல்வேறு கட்டங்களின் வரலாறு, மதம், கட்டிடம், சுவர் ஓவியம், சிற்பனை முதலிய துறைகளிலான மரபுச் செல்வங்கள் வைக்கப்பட்டன. வரலாற்றுப் பதிவு என்று கருதப்படும் 92 மீட்டர் நீளமான சுவர் ஓவியம், அவற்றில் மிக புகழ் பெற்றது. திபெத் வரலாறு, பழங்காலச் செவிகதைகள் முதலியவற்றை அது வெளிப்படுத்துகிறது.


1 2 3
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040