ஸ்பெயின் அரங்கினுள்ளே சுவர்களில் வண்ணப் பிரம்புகளால், சீன எழுத்து கவிதைகள் உருவாக்கப்பட்டன. சூரிய ஒளி, பிரம்புகளிடையிலுள்ள இடைவெளிகளைக் கடந்து, அரங்கில் நுழைகிறது. ரசிகர்கள் ஸ்பெயினின் நகரங்களின் சாலைகளில் இருப்பதைப் போல, அந்நாட்டின் வரலாற்றையும் மக்களின் அறிவாற்றலையும் உணர்ந்து கொள்ளலாம். பிரம்புகளின் மூலம், கிழக்கு மற்றும் மேற்கத்தியப் பண்பாடுகளை நெருக்கமாக இணைக்கும் வடிவமைப்பு, ரசிகர்களின் மனத்தில் ஆழப்பதிவது உறுதி. ஸ்பெயினுக்கான சீனத்தூதர் சூபாங்சாவ் இவ்வரங்கைப் பாராட்டினார். அவர் கூறியதாவது:
இவ்வரங்கின் வெளித்தோற்றம் மிகவும் அழகானது. வடிவமைப்பாளர், சீன கையெழுத்துக் கலை, கவிதை உள்ளிட்ட பண்பாட்டுக் கருத்துகளைப் பயன்படுத்தியுள்ளார். இரு நாடுகளும் புரிந்துணர்வையும் தொடர்பையும் வலுப்படுத்துவதற்கான சான்று, இதுவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
பெற்றோரின் நகரத்திலிருந்து, பிள்ளைகளின் நகரமாக என்பது, ஸ்பெயின் அரங்கின் தலைப்பாகும். வேறுபட்ட மக்கள் குழுக்களின் பார்வைகளின் மூலம், ஸ்பெயினின் நகர மாற்றங்கள் விளக்கப்படும்.