நான் இங்கு 6 ஆண்டுகளாக வாழந்து வருகிறேன். அழகான இயற்கைக் காட்சிகளை விரும்புகிறேன். இங்குள்ள போக்குவரத்து வசதிகள் வசதியாக உள்ளன. இங்குள்ள மக்களை நான் மிகவும் விரும்புகிறேன். எனது ஊர் போலவே நான் இதனை உணர்கிறேன் என்று எலன் பார்டீ தெரிவித்தார்.
ஷெகரிலாவில் என்ன அவரை மிகவும் கவர்ந்துள்ளது என்ற கேள்விக்குப் பதிலளித்த போது, அதன் பலதரப்பட்ட தன்மை என்று அவர் கூறினார். இங்குள்ள பீடாஜொ பூங்கா, உயிரினங்களின் பலதரப்பட்ட தன்மையை மிக சிறந்த முறையில் வெளிப்படுத்துகிறது. இப்பூங்காவில் தான் உண்மை இயற்கையை கண்டு அனுபவிக்க முடியும் என்று ஷாங்காய் பயணி zang chengqi கூறினார்.
மாநகரில் வாழ்ந்து வருகின்ற நான், இங்குள்ள இயற்கைக் காட்சியைக் கண்டு உணர்ச்சி வசப்பட்டேன். மனிதகுலம், ஆடு மாடுகளுடன் இணக்கமாக வாழ்கின்ற இயற்கை சூழ்நிலையை நான் மிகவும் விரும்புகிறேன். நாட்டின் வேறு காட்சி இடங்களை விட இங்குள்ள பாதுகாப்பு நிலைமை மேலும் சீராக உள்ளது. சாலைகளின் பக்கங்களில் சிறிய விலங்குகள் காணப்படலாம். என்னை பொறுத்தவரை இப்பயணம் ஒரு சிறப்பான அனுபவம் என்று அவர் கூறினார்.
பல்வகைபட்ட உயிரினங்களைத் தவிர, பல்வேறு இனங்களின் பண்பாடுகளும் இங்கு செழுமையாக உள்ளன. யுன்னான் மாநிலத்தில் அமைந்துள்ள மிக பெரிய திபெத் மரபுவழி புத்தமதக் கோயிலான song zan lin கோயில், ஷெகரிலா மதப் பண்பாட்டின் முக்கிய சின்னமாகும். Zang chengqi என்ற பயணியர், சிறப்பாக இக்கோயிலைப் பார்வையிட்டார்.