மிகச் செழுமையான காலத்தில், சேரா துறவியர் மடத்தில் 9000 துறவிகள் இருந்தனர்.
மதமறை விவாதம், லாமாக்களின் கற்றல் வழிமுறைகளில் ஒன்றாகும். நாள்தோறும் சேரா துறவியர் மடத்திலுள்ள துறவியர்கள், ஒரு முறை மதமறை விவாத நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். அறைகூவல் ரீதியான விவாதம் இதுவாகும். இதில் கலந்து கொள்பவர், பல்வேறு சைகைகளைக் கொண்டு, விவாத ஆற்றலை வலுப்படுத்துகின்றனர். சில சமயம், அவர்கள், கைத்தட்டல் மூலம், எதிர்தரப்பின் மீது நிர்ப்பந்தம் திணிக்கின்றனர். வேறு சில சமயம், அவர்கள், சபமாலையை இழுத்து, புத்தரின் ஆற்றலைக் கொண்டு எதிர்த்தரப்பைத் தோற்கடிக்கின்றனர்.
சேரா துறைவியர் மடத்தில் திபெத்தில் தயாரித்த பத்தாயிரக்கணக்கான தங்க அல்லது வெண்கலப் புத்தர் சிலைகள் இருக்கின்றன. அவற்றில், இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட அதிகமான வெண்கலப் புத்தர்ச் சிலைகளும் இருக்கின்றன. இந்தப் புத்தர் சிலைகள், மிகுந்த கலை மதிப்புள்ள கைவினைக் பொருட்களாகும். இவை, செழுமையான திபெத் மதக் கலையைக் காட்டுகின்றன.