குருமார் சோங்காபா, தற்போதைய தா ஏர் துறவியர் மடம் அமைந்துள்ள இடத்தில் பிறந்தார். 1379ஆம் ஆண்டில், அவரது தாய் மற்றும் நம்பிக்கையாளர்கள் அவரது விருப்பப்படி, அவரது பிறப்பிடத்தில் கற்களால் பக்கோடா ஒன்றை கட்டியமைத்தனர். அதற்குப் பின் ஒரு கோயில் கட்டப்பட்டது. தா ஏர் துறவியர் மடம் இவ்வாறு பிறந்தது. புத்த மத நூல்களும், வரலாறு, இலக்கியம், தத்துவம், மருத்துவம், சட்டமியற்றல் உள்ளிட்ட துறைகளின் கல்வியியல் படைப்புகளும் இத் துறவியர் மடத்தில் செல்வமாக வைக்கப்பட்டுள்ளன.