தா ஏர் துறவியர் மடத்தில், ஆண்டுதோறும் புத்த மத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது, மிகவும் கோலாகலமாக இருக்கும். ஓவியம் அல்லது மிகப் பெரிய தாங்கா எனும் புத்தர் ஓவியத்தை காணும் நிகழ்ச்சி, புத்தரை வெளிப்படுத்தும் விழா என அழைக்கப்படுகிறது. மக்களின் கவனத்தை மிகவும் ஈர்க்கும் இந்நடவடிக்கை ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. அப்போது, ஓராண்டுகாலமாக உள்ளே வைக்கப்பட்டுள்ள புத்தர் ஓவியம் வெளியே கொண்டு வரப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும்.