தரபுங் துறவியர் மடத்தில் பத்து ஆயிரக்கணக்கான தொல்பொருள் நூல்கள் இருக்கின்றன. பல்வேறு மண்டபங்களில், வேறுப்பட்ட காலத்தில் செய்யப்பட்ட பல சிற்பங்களின் வடிவமைப்புக்கள் உயிராற்றல் மிக்கவையாய் இருக்கின்றன. இவை, திபெத் சிற்பக் கலையின் உயர்ந்த நிலையைக் காட்டுகின்றன. தவிரவும், இத்துறவியர் மடத்தில் புத்த மதமறையான கங்யூர் மற்றும் தெங்யூர் என்ற மூன்று பிட்டாக்கள் சிறப்பாக வைக்கப்படுகின்றன. அவற்றை எண்ணி கணக்கிட்டால், தலா 100க்கு மேலாகும். சோங்கப்பா உட்பட 3 தலைசிறந்த குருமார்கள் இயற்றிய சில நூறு மதமறைகளின் கையெழுத்துப் பிரதிகள் இங்கே உள்ளன. திபெத் வரலாறு, மதம், கலை முதலிய துறைகளை ஆராய்வதற்கு இந்த ஆவணங்களும் நூல்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை.