மரச் செதுக்கல் வேலைப்பாடு, செதுக்கல் கலைகளில் ஒன்றாகும். இது, சீனாவில் நாட்டுப்புறக் கலையாக கருதப்படுகிறது. மரத்தில் செதுக்கல் வேலைப்பாடு, சீனாவின் பல இடங்களில் பரவலாக உள்ளது. இக்கலையின் வரலாற்றில் தோற்றம், வளர்ச்சி, மற்றும் ஏற்றத் தாழ்வு மக்கி வளர்ச்சிக் காலக் கட்டங்கள் காணப்படுகின்றன. வேறுப்பட்ட பழக்கவழக்கங்கள், பண்பாடு, இயற்கை வளங்கள் ஆகியவற்றின்படி, பல்வகை செதுக்கல் கலைப் பிரிவுகளும் உருவாகியுள்ளன.
இந்தப் படத்தொகுப்பிலுள்ள மரச் செதுக்கல் வேலைப்பாடு, சீனாவின் நடுப்பகுதியிலுள்ள ஆன்ஹுய் மாநிலத்தின் ஹுவாங்ஷான் மாவட்டத்தில் அதாவது பண்டையக்காலத்தில் ஹுய்சோ என அழைக்கப்பட்ட மாவட்டத்தில் காணப்படுகிறது.
இசை, கதை, மலை, ஆறு, பறவை, மீன், மலர் உள்ளிட்டவை, ஹுய் பிரிவு மரச் செதுக்கல் படைப்புகளில் முக்கிய அம்சங்களாக உள்ளன.