கேலிச்சித்திரம் எனும் மக்களால் வரவேற்கப்படுகின்ற வழிமுறையின் மூலம், அரசியல் கண்ணோட்டம் மற்றும் ஆட்சிப் புரியும் கருத்துகளை விளக்கிக்கூறி, அரசியல் உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்தி, மேலதிகமான தகவல்களை வெளியிட்டு, பொது மக்களுடன் இணைந்து நெருக்கமாக தொடர்புகொண்டு, மக்களின் வரவேற்பைப் பெறலாம் என்று தெரிகிறது.
அண்மையில், சீனாவின் தலைநகர் பெய்ஜிங் மாநகரத்தைச் சேர்ந்த ச்சியாங்லொங் இணையதளம், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் பற்றிய கேலிச்சித்திரத்தை வெளியிட்டது. அதில் 7 பகுதிகள் உள்ளன. 39 நாட்கள் உள்நாட்டுப் பணி ஆராய்ச்சி, வெளிநாடுகளில் பணிப் பயணம், தொடர்புடைய முக்கிய ஏற்பாட்டு நடவடிக்கைகள், பொது விடுமுறையின் போது அவரது நடவடிக்கைகள் முதலியவற்றின் மூலம், ஷி ச்சின்பீங் அவர்களின் பணியை இக்கேலிச்சித்திரங்கள் விளக்கிக் கூறுகின்றன.