/2015gewu.mp4
|
இவ்வாண்டு சீன-நேபாள தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவாகவும், சீன-வங்காளதேச தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 40ஆம் ஆண்டு நிறைவாகவும் இருக்கிறது. சீன-தெற்காசிய பண்பாட்டு பரிமாற்றத்தை முன்னேற்றும் வகையில், சீனப் பண்பாட்டு அமைச்சகம் 32 கலைஞர்களை உள்ளடக்கிய கலைக் குழு ஒன்றை உருவாக்கியுள்ளது. 2015ஆம் ஆண்டின் சீனப் புத்தாண்டினை முன்னிட்டு, மகிழ்ச்சியான வசந்த விழா எனும் கலை நிகழ்ச்சி அரங்கேற்ற நடவடிக்கை, நேபாளம், வங்காளதேசம் மற்றும் இலங்கையில் நடைபெறும். சீன பாரம்பரிய நடனம், இசைக் கருவிகள், குங்பூ கலை முதலியவை அரங்கேற்றத்தின் முக்கிய அம்சங்களாகும். 26ஆம் நாள் இக்கலைக் குழு நேபாளத்தில் முதலாவது அரங்கேற்றம் நடத்தி இந்நடவடிக்கையை துவக்கும்.