யம்ட்சோ என்னும் ஏரி, திபெத்தில் மூன்று புனித ஏரிகளில் ஒன்றாகும். திபெத் மொழியில் பச்சைக்கல் என்ற பொருள்படும். இது, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லோக்காவைச் சேர்ந்த லாங்காச்சி வட்டத்தில் அமைந்துள்ளது. அதன் அழகான இயற்கை காட்சி எண்ணற்ற பயணிகளை ஈர்த்து வருகிறது. அதன் பரப்பளவு 638 சதுர கிலோமீட்டர். கடல் மட்டத்திலிருந்து 4441 மீட்டர் உயரம் உள்ளது. தொலைவிலிருந்து பார்த்தால், மலைகளில் இடம்பெற்ற தூய்மையான பச்சைக்கலைப் போன்று தெரியும். வெவ்வேறான கோணத்திலிருந்து பார்க்கும் போது, ஏரியின் மேற்பரப்பில் ஏற்படும் வண்ணங்களைக் கண்டுரசிக்கலாம்.