லுவோ யாங் நகரின் கலைக்குழுவின் அரங்கேற்றம்
சீனாவின் ஹெனான் மாநிலத்தில் உள்ள லுவோ யாங் பண்பாடு மற்றும் சுற்றுலா நிகழ்ச்சியின் துவக்க விழா
லுயோ யாங் நகரின் மையப்பகுதியில் நடைபெற்ற ஹே லுவோ பண்பாடு மற்றும் சுற்றுலா நிகழ்ச்சி நீர் விளையாட்டின் பிண்ணனியில் சிறப்பாக நடைபெற்றது இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடனக்கலைஞர்கள் தங்களது நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர். குறிப்பாக இந்தியா, சீனா, ரசியா,துருக்கி, ஸ்பெயின்,பல்கேரியா, ஹங்கேரி,லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த கலைஞர்கள் இதில் சிறப்பான நடனத்தை வழங்கினர். ஒவ்வொரு நாட்டினரும் தங்களது நடத்தை சிறப்பாக வழங்கினர், குறிப்பாக சீனா இந்தியா ரசியா நாடுகளின் நடனம் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றது. திரளான பார்வையாளர்கள் இந்த பண்பாடு கலாச்சார சுற்றலா நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து தங்களது ஆதரவை வழங்கினர்.
முன்னதாக நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் லுவோ யாங் மாநகராட்சித் தலைவர், சுற்றுலா துறை அலுவலர் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் விருந்தினர்கள் வரவேற்று பேசினர், லுவோ யாங் மாநகராட்சித் தலைவர் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
நிலவழிப் பட்டுப்பாதையின் துவக்க புள்ளியாய் மட்டும் அன்றி பாராம்பரிய கலாச்சார மற்றும் பண்டைய சீனாவின் தலை நகராக திகழ்ந்த ஹெனான் மாநிலத்தில் நடைபெற்ற இந்த பண்பாட்டு மற்றும் சுற்றுலா துவக்க நிகழ்ச்சி மக்களிடையே வரவேற்பை பெற்றது மட்டும் அன்றி வரலாற்றின் பிண்ணனிக்கும் சாலப் பொருந்தும். இது சீனாவின் வளர்ச்சி பாதையின் மற்றுமொரு மைல்கல் முத்திரையாகும்.