• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
விவசாயியின் பலகை ஓவியம்
  2016-10-14 17:25:40  cri எழுத்தின் அளவு:  A A A   

ச்சிஜியாங் விவசாயியின் பலகை ஓவியம்—பலகை கீழான சீன கனவு

ச்சிஜியாங் விவசாயி பலகை ஓவிய கலை ஊர், சோங்ச்சிங் மாநகரின் ச்சிஜியாங் பிரதேசத்தின் குஜியான் மலையில் உள்ளது. இங்குள்ள அழகான இயற்கைச் சூழல், பலகை ஓவியர்களுக்கு கலை அகத்தூண்டலை வழங்கியுள்ளது. அவர்களது வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்புகள் பலகை ஓவியத்தின் வழி பதிவு செய்யப்பட்டுள்ளது.

லீ ச்சேங்சி என்பவர் சோங்ச்சிங் மாநகரின் பொருள் சாரா பண்பாட்டு திட்டப்பணியின் ச்சிஜியாங் விவசாயி பலகை ஓவியத்தின் பிரதிநிதித்துவமான வாரிசு ஆவார். அவர், பலகை ஓவியத்தில் ஆழந்த ஈடுபாடு உடையவர். இவர் பலகை ஓவியப் பணியில் ஈடுபட்டு 35 ஆண்டுகளாகியுள்ளது.

செய்முறை, தொழில் நுட்பம் முதலிய துறைகளில் ச்சிஜியாங் பலகை ஓவியம் இடைவிடாமல் புத்தாக்கமாக வளர்ந்துள்ளது. லியோயுயே என்பவர், புதிய தலைமுறை பிரதிநிதியாக, ச்சிஜியாங் பலகை ஓவியத்தின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

ச்சிஜியாங் விவசாயி பலகை ஓவியம், மர பலகையில் செதுக்கப்பட்ட, தாளில் தேய்க்கப்பட்ட சீன கிராம வாழ்க்கை வளர்ச்சி வரலாறு ஆகும். பலகை ஓவியத்தின் மூலம், ச்சிஜியாங் விவசாயிகள், அருமையான வாழ்க்கைக்கான தேடல் மற்றும் கனவு காணப்படுகிறது. குறிப்பாக, இணையத்தள சகாப்தமான இன்று, ச்சிஜியாங் பலகை ஓவியத்தில் பல புதிய தலைமுறையின் காரணிகள் கலந்துள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040