பிரிட்டனின் இலண்டனில் இருந்து புறபட்ட சரக்கு தொடர்வண்டி ஒன்று ஏப்ரல் 24ஆம் நாள் காலை 10 மணியளவில், அலாசாகாவ் எனும் நுழைவாயிலைக் கடந்து சீனாவுக்குள் நுழைந்தது.
மருந்துகள், குழந்தைகள் பயன்படுத்தும் உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட வர்த்தக பொருட்களுடன் இந்த சரக்குத் தொடர்வண்டி யீ வூ நகருக்கு தொடர்ந்து செல்லும்.
ஐரோப்பாவில் இருந்து சீனாவுக்கு வந்துள்ள முதல் சீன-ஐரோப்பிய சரக்கு தொடர்வண்டி சேவை இதுவாகும்.