பூசியென் ஏரி என்ற பாடல். இப்பாடல் மூலம் ஓர் இளைஞர் தனது காதலிடம் நினைவை தெரிவித்து பூசியென் ஏரி மீதான மக்களின் விருப்பத்தையும் வெளிப்படுத்தினார். "இப்படியான இரவில், என் மனம் ஆழமாக புண்படுத்தப்படுகிறது. நாம் பிரிக்கப்பட்ட போதிலும் இந்த நினைவுகள் உன் மனதில் எப்போதும் பதிந்திருக்கும். இந்த இனிமையான விருப்பம் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு விடாது. இலையுதிர்கால காற்று, ஏரியில் அலைகளை ஏற்படுத்தி மனதையும் அசைக்கிறது. விரைவில் பகல் வரும். பூசியென் ஏரியின் நீர் தொடர்ந்து அசைந்து கொண்டிருக்கிறது. ஆனால் புண்படுத்தியவர் இதைக் காண முடியாது......."
பூசியென் ஏரி, சீனாவின் யுன்னான் மாநிலத்தின் யு சி நகரில் அமைந்துள்ளது. அது கடல் மட்டத்திலிருந்து 1722.5 மீட்டர் உயரத்தில் உள்ளது. அதன் பரப்பளவு 216.6 சதுர கிலோமீட்டராகும். அதன் சராசரி ஆழம், 95.2 மீட்டர். மிக அதிக ஆழம், 158.9 மீட்டர் ஆகும். அது ச்சு ஜியங் ஆற்றின் ஊற்று மூலமாகும். 10 ஆண்டுகளுக்கு முன், சீனாவின் நீர் தொடர்பான தொல்லியல் குழு, ஏரி நீரின் கீழ் ஒரு பண்டைகால நகரத்தின் சிதிலத்தைக் கண்டறிந்தது. இதனால் பூசியென் ஏரி மேலும் புகழ் பெற்றது. இது பற்றி பல அழகான செவிவழி கதைகள் உலவுகின்றன. இவ்வேரி அமைந்துள்ள Luchong கிராமத்தின் கிராமவாசி wang fan கூறியதாவது