செப்டம்பர் முதல் நாள் துவக்கம் அடுத்த ஆண்டின் ஏப்ரல் முதல் நாள் வரை மீன்பிடிப்பு காலகட்டமாகும். இப்போது, யின்யூ மீனை மட்டும் பிடிக்க முடியும். ஏனெனில் இத்தகைய மீன், பிடிக்கப்படாமல் இருந்தால் மணமடையும். இது ஏரியை மாசுபடுத்தும். எனவே மீன்பிடிப்பு மூலமாக ஏரி நீரைப் பாதுகாக்க முடியும். தவிரவும் குடும்ப வருமானமும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
லு சோங் கிராமத்தின் வடக்கு பகுதியில் ஒரு மலை அமைந்துள்ளது. மலையில் குவன் யின் கோயில் உள்ளது. 700 ஆண்டுகளுக்கு முந்தைய யுவான் வம்ச காலத்தில் அது கட்டியமைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. தற்போது chuan hui என்ற பெண் துறவி மட்டும் இக்கோயிலில் வாழ்கின்றார். அவர் நாள்தோறும் திருமறை ஓதி புத்த மாளிகையைத் துப்புரவுப்படுத்துகிறார்