ஏரியின் பக்கத்தில் உணவகத்தை நடத்தினால், கழிவுப்பொருட்களை சிறப்பாக கையாண்டு முறையாக அப்புறப்படுத்த வேண்டும். தவிரவும் காய்கறிகளையும் ஆடைகளையும் ஏரியில் கழுவ கூடாது. பன்றி வளர்ப்பு மூலம் ஏற்படும் கழிவுப் பொருட்களும் ஏரியில் வெளியேற்றப்பட கூடாது. எண்ணெயை எரிக்கின்ற படகுகளை ஏரியில் இயக்குவது தடை செய்யப்பட்டுள்ளது. மிதி படகுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.
பூசியென் ஏரியைச் சுற்றி பல உணவகங்கள் உள்ளன. அவை, பயணிகளுக்கு சிறப்பு வாய்ந்த உணவுகளை வழங்குகின்றன. யின் யூ எனும் 2, 3 மிலிமீட்டர் நீளமான சிறிய மீன் வகை, இந்த ஏரியில் வாழ்கின்றது. அதன் ஊட்ட சத்து உடல்நலத்துக்கு மிக நல்லது. மே முதல் அக்டோபர் திங்கள் வரை இங்குள்ள கிராமவாசிகள் முக்கியமாக சுற்றுலா வணிகத்தில் ஈடுபடுகின்றனர். ஏனைய காலங்களில் அவர்கள் மலைகளில் பயிர் செய்து யின் யூ வகை மீன்களைப் பிடிக்கின்றனர். 19 வயதான ஷியெ ஷியுங், ஆண்டுதோறும் பூசியென் ஏரியில் மீன்களைப் பிடிக்கிறார். இங்குள்ள உயிரின சமநிலையைப் பாதுகாக்க, உள்ளூர் அரசு மீன்பிடிப்பு நேரம் தொடர்பாகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மீன்பிடிப்பு அனுமதி சான்றிதழைப் பெற்ற மீனவர்கள் மட்டுமே இங்கு மீன் பிடிக்க முடியும். அவர் கூறியதாவது