யுவான் வம்ச காலத்தில் இக்கோயில் கட்டியமைக்கப்பட்டது. தற்போதைய கட்டிடங்கள் ச்சிங் வம்ச கட்டிடங்களாகும். 2006ம் ஆண்டு மைய மாளிகை புதுப்பிக்கப்பட்டது. வசந்த விழா விடுமுறை, மே திங்கள் விடுமுறை மற்றும் தேசிய விழா விடுமுறையில் பயணிகள் மிக அதிகமாக வருகின்றனர் என்று அவர் கூறினார்.
2001ம் ஆண்டு முதல் பூசியென் ஏரியின் அடியில் கண்டறியப்பட்ட நீரில் மூழ்கிய பழைய நகரத்தினால் மேலும் புகழ் பெற்றது. இவ்வேரியில் 8 மாளிகைகள் அடங்கிய கட்டிடத் தொகுதி ஒன்று கண்டறியப்பட்டது. அவற்றில் எகிப்தின் பிரமிடு போன்ற 20 மீட்டர் உயரமான மாளிகை மிகவும் கவனத்துக்குரியது.
அழகான பூசியென் ஏரி, மலை, குவென்யின் கோயில், நீரிலுள்ள பழைய நகரம் ஆகியவை, பல்வேறு இடங்களின் பயணிகளை ஈர்க்கின்றன. குவன் மிங் தேசிய இனப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சோ யிங்லெய் 2வது முறையாக இங்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். இங்குள்ள இயற்கை காட்சி கவர்ச்சி மிக்கது என்று அவர் கூறினார்.