முன்பு முதியவர்கள் ஆடைகளைத் தைப்பதற்கு எங்களுக்குக் கற்பித்தனர். முதியவர்கள் எங்களது ஆசிரியர்கள் தான். ஆனால் நீண்டகால படிப்பு மூலமாகவே நான் இவ்வேலைப்பாடுகளை கற்றுத்தேர்ந்தேன். பிறகு நான் இதனை எனது குழந்தைகளுக்குக் கற்பித்தேன். எதிர்காலத்தில் இவ்வேலைப்பாடு தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வெளிக்கொணரப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார் அவர்.
25 வயதான தோ மெய்ஃபாங், யாங் சோயிங்கின் பேத்தி ஆவார். வெளி ஊரில் கல்வி பெற்ற அவருக்குத் துணி நெசவைக் கற்பதற்கு நேரம் மிக குறைவு. விடுமுறையின் போது மட்டுமே இவ்வேலைப்பாடுகளை அவரால் கற்க முடியும். எனவே, அவர் துணி நெசவு செய்ய முடியாது. எளிதான பூத்தையலை மட்டும் அவர் கற்றுத்தேர்ந்தார். துணி நெசவு மிகவும் கடினமானது என்று அவர் கருத்து தெரிவித்தார்.