• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பு அர் தேயிலை
  2012-02-23 16:34:13  cri எழுத்தின் அளவு:  A A A   

சா மா குதாவுக்கு நீண்ட வரலாறு உண்டு. 2000 ஆண்டுகளுக்கு முன் பழங்கால சீனாவில் இந்த வர்த்தகப் பாதை சீரான பங்காற்றத் துவங்கியது. சீனாவின் தாங் வம்ச காலத்தில் பு ஆர் என்ற நகரில் உற்பத்தி செய்த தேயிலை, இப்பாதை மூலம் திபெத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, திபெத் மக்கள் அவர்களது குதிரைகளை எங்களது தேயிலைக்காகப் பரிமாறிக் கொண்டனர். இது புகழ் பெற்ற தேயிலை மற்றும் குதிரை சந்தையாகும் என்று அவர் கூறினார்.

தேயிலை மற்றும் குதிரை சந்தையில், திபெத்தின் குதிரை, தோல், மூலிகை மருந்து ஆகியவை, பெருநிலப்பகுதியின் தேயிலை, துணி, உப்பு, அன்றாட பயன்பாட்டு பாத்திரங்கள் முதலியவற்றுக்கு பரிமாறிக் கொள்ளப்பட்டு வர்த்தகம் செய்யப்பட்டது. திபெத்திற்கு நுழைய, 2 நெறிகள் உண்டு. ஒன்று யுன்னான் மாநிலத்தின் பு ஆர் தேயிலை உற்பத்தி இடத்திலிருந்து திபெத்தின் வட மற்றும் மத்திய பகுதி வழியாக நேபாளம் மற்றும் இந்தியாவுக்குச் சென்றது. இன்னொன்று, சிச்சுவான் மாநிலத்தின் யா அன்னிலிருந்து லாசா வழியாக நேபாளம் மற்றும் இந்தியாவுக்கு சென்றது. இப்பாதை நீண்டகாலமாக சிறப்பு பங்காற்றி வருகிறது. இது குறித்து ஹுவாங்யென் மேலும் கூறியதாவது

1 2 3 4 5
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040