• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பு அர் தேயிலை
  2012-02-23 16:34:13  cri எழுத்தின் அளவு:  A A A   

திபெத் இன மக்கள் நீண்டகாலமாக பு அர் தேநீரை அருந்துகின்றனர். அவர்களது தனிச்சிறப்பு வாய்ந்த வெண்ணெய் தேநீர், பு ஆப் தேயிலை, வெண்ணெய் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டது. 1996ம் ஆண்டு 10வது பஞ்ச்சன் அர்தெனி, சிறப்பாக யுன்னானுக்கு வந்து பு அர் தேயிலையின் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையைப் பார்வையிட்டார். அவர் சில பத்து டன் அளவிலான பு அர் தேயிலையை வாங்கினார். அவர் வாங்கிய பு அர் தேயிலைகளின் வடிவம், காளான்களைப் போல உள்ளன. அவை, மதத்துறையினருக்குச் சிறப்பாக வழங்கப்படும். உணவு சாப்பிடாமல் இருப்பது சரி. ஆனால் தேநீரை அருந்தாமல் இருக்க முடியாது என்று திபெத் மக்கள் கருதுகின்றனர். அவர்கள் பு அர் தேநீரை அவர்களது உயிரைப் போல கருதுகின்றனர் என்று அவர் கூறினார்.

நீண்டகாலமாக, யுன்னான் மாநிலம், திபெத் தேயிலையின் முக்கிய உற்பத்தி இடமாக இருந்து வருகிறது. சா மா குதாவ் வர்த்தகப் பாதையின் முக்கிய நிலையமான தா லி நகரத்தில் தேயிலை சேகரிக்கப்பட்டு செங்கல் வடிவத்தில் பதனீடு செய்யப்பட்டு நீளமான இந்த வர்த்தகப் பாதையில் கொண்டு செல்லப்பட்டது. எல்லைப் பிரதேசங்களின் தேயிலை வினியோகத்தை உறுதிபடுத்த, நவ சீனா நிறுவப்பட்ட பின், சீன அரசு சிறப்பான வாரியங்களை உருவாக்கி சலுகையுடன் கூடிய கொள்கைகளை வகுத்து நிதி மானியத்தை வழங்கியது. தற்போது பொருளாதார வளர்ச்சி மற்றும் போக்குவரத்தின் மேம்பாடுடன், யுன்னான் உள்ளிட்ட பெருநிலப்பகுதியின் தேயிலை, மிக வசதியாக சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களுக்கு விற்கப்பட்டு வருகிறது. இது, இப்பிரதேச மக்களின் வாழ்க்கையை செழுமையாக்கியது. சா மா குதாவ், புதிய வடிவில் பெருநிலப்பகுதியையும் சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களையும் நெருக்கமாக இணைக்கின்றது. சு ச்சி அன் மேலும் கூறியதாவது

1 2 3 4 5
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040