சீன நாட்டின் பண்பாட்டையும், சுமார் 2000 வருட பாரம்பரிய பெருமையும், புகழையும் தன்னகத்தே கொண்டது இந்த சுவர். சீனப்பெருஞ்சுவர் ஷின் ஷீ ஹீவாங் டி என்ற பேரரசரால் அந்நிய நாடுகளின் படையெடுப்புகளில் இருந்து தப்பிக்கவும் குறிப்பாக குதிரைபடைகள் இந்த சுவரை தாண்டி வருவதை தவிர்க்கவும் கட்டப்பட்டது. மிங் வம்ச காலத்தில் விரிவாக்கப்பட்டு ஹன் வம்ச காலத்தில் இதன் நீளம் பத்து ஆயிரம் கிலோ மீட்டரை தாண்டியிருக்கிறது.
போர் வீர்ர்கள், விவசாயிகள், குற்றவாளிகளை கொண்டு கட்டப்பட்ட இந்த நீள பாதை பெருஞ்சுவர் உயர்ந்த மலைதொடரிலும், சமவெளியில் உள்ள ஆபத்தான இடத்தையும் தாண்டி கட்டப்பட்டது. இரண்டு பக்க சுவர்களுடைய இந்த சுவர் நடுவில் ஏறுவதற்கு ஏதுவாக படிகளோடு கூடிய அமைப்புடன் இருக்கிறது. கோபுரத்தின் மேல் நின்று பார்த்தால் கீழே உள்ள இடங்கள் துல்லியமாக தெரியும். கீழ்தளத்தில் பீரங்கிகளும், துப்பாக்கிகளும் சுடுவதற்கு தோதாக துளைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றனர்.
ஆங்காங்கே கண்காணிப்பு நிலையங்களும் வழிபாட்டு கோபுரங்களும் இருப்பதினால் அயல் நாட்டினரது படையெடுப்பு நடந்துவிட கூடிய தருணத்தில் கோபுரத்தின் உச்சியில் ஏற்றப்படும்