தீபத்தினால் தகவல்கள் பரிமாரப்பட்டு உதவிக்கான சமிஞ்சை தரப்படும் .சமிஞ்சை புகையை எரித்து தரப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு புகை என்றால் 100 எதிரிகள் என்றும் 2 புகை என்றால் 500 பேர் இருக்கலாம் என்ற சமிஞ்சை தரப்பட்டது. இந்த சமிஞ்சையின் மூலம் சுமார் 1000 கிலோமீட்டருக்கு செய்தி சென்று விடும். இந்த சுவருக்கு அடியில் பல போர்கள் நடைபெற்றதாக சரித்திரமும் உண்டு. இந்த சுவரை ஏராளமானோர் வந்து பார்வையிட்டுகொண்டுள்ளனர். இந்த பெருஞ்சுவர் ஷாங்காய்குவான் என்ற இடத்தில் கடலுடன் முத்தமிட்டு எல்லோரையும் கவர்ந்துகொண்டு கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது சீனத்து சுவர்.