• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி
  2014-11-26 09:09:05  cri எழுத்தின் அளவு:  A A A   

குழந்தைத் தொழிலாளிகளை உருவாக்குவது உலகின் மிக மோசமான அருவருக்கத்தக்க செயல்முறை என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். மனிதநேயத்துக்கு இது புறம்பானதாகும். சகிக்கப்பட முடியாதது. ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. இந்நிலைமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

உலக குழந்தைகளின் உரிமை மற்றும் நலன் பாதுகாப்பதில் மேலதிக மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்த அதேவேளையில், இதற்கானப் பணியில் தன்னுடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா அவருடன் சேர்ந்து முயற்சி மேற்கொள்வேன் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

ஒருவர் இந்தியர். ஒருவர் பாகிஸ்தானியர். கல்வி பெறும் உரிமை பெறவதை நாடுவதிலும், தீவிரவாத எதிர்ப்புத் துறையிலும் அவர்கள் சேர்ந்து பாடுபட்டு வருகின்றனர். இது மிக முக்கியமானது என்று நோபல் பரிசுக் குழு அமைதிக்கான விருதளிக்கும் உரையில் கூறியது. தற்போது உலகில் 16 கோடியே 80 இலட்சம் குழந்தைத் தொழிலாளிகள் உள்னர். 2000ஆம் ஆண்டில் தற்போதைய நிலைமையை விட இவ்வெண்ணிக்கை மேலும் 7 கோடியே 80 இலட்சம் அதிகம். குழந்தைத் தொழிலாளி நிலைமையை ஒழிக்கும் இலக்காக நாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்று இக்குழு கூறியது.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040