சக்திவேல்.......கத்திரிக்காய், அவரைக்காய் முதலிய காய்கறிகள், இந்தியாவில் சமைக்கும் போது அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.
ஜெயா.......ஆமாம், இன்றைக்கு, கத்திரிக்காய் மற்றும் அவரைக்காயால் சமைக்கப்படும் ஒரு பொரியலை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.
சக்திவேல்....... கத்திரிக்காய் மற்றும் அவரைக்காய் பொரியல் என்று நாம் இதனை அழைக்கலாம்.
ஜெயா.......சீன மொழியில், அதன் பெயர் ச்சியேசி தொச்சியௌ.
சக்திவேல்....... வழக்கம் போல, முதலில், தேவையான பொருட்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.
ஜெயா....... நண்பர்களே, கவனமாகக் குறித்துக் கொள்ளுங்கள்.
சக்திவேல்.......கத்திரிக்காய் 200 கிராம், அவரைக்காய் 200 கிராம், காய்ந்த மிளகாய் 5, பூண்டுத் துண்டுகள் 2, சிப்பி சாறு 20 மில்லி லீட்டர், மிதமான சோயா சாறு 10 மில்லி லீட்டர் ஆகியவை தேவை.