• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிறுபான்மை இனங்களின் 10-வது பாரம்பரிய விளையாட்டுப் போட்டி
  2015-09-09 14:08:01  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் சிறுபான்மை இனங்களின் 10-வது பாரம்பரிய விளையாட்டுப் போட்டி கடந்த ஆகஸ்டு திங்களில் உள்மங்கோலியாவின் ஏர்டோஸ் நகரில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதிலும் இருந்து, 34 பிரதிநிதிக் குழுக்களைச் சேர்ந்த 6,240 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

சீனாவின் சிறுபான்மை இனங்களின் பராம்பரிய விளையாட்டுப் போட்டி தொடர்பான பொது அறிவு எமது நேயர் நண்பர்களுக்கு தெரியுமா?அது தொடர்பான கேள்விகளைக் கேட்க ஆவலுடன் உள்ளீர்களா?

சிறுபான்மை இனங்களின் தேசிய நிலை பாரம்பரிய விளையாட்டு போட்டி என்பது, 1953ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய இனங்களின் விளையாட்டு அரங்கேற்ற நிகழ்ச்சி மற்றும் போட்டியின் அடிப்படையில் வளர்ந்து உருவாக்கப்பட்டது. தற்போது, இந்தப் போட்டி, நாடளவில் அதிக செல்வாக்கு பெற்ற பெரிய விளைளையாட்டு போட்டிகளில் ஒன்றாகும். பல்வேறு தேசிய இனங்களின் பாரம்பரிய விளையாட்டு வகைகளைத் தொகுப்பது, விளையாட்டுப் பண்பாட்டைத் தொடர்ந்து வளர்ப்பது, அனைவரும் உடல்பியற்சியில் பங்கேற்பது, பொது மக்களின் உடல்நலத்தை மேம்படுத்துவது, பல்வேறு தேசிய இனங்கள் ஒன்றுபடுவது ஆகியவற்றுக்கு, இந்த விளையாட்டுப் போட்டி சிறந்த பங்களிப்பை நல்கி வருகிறது.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040