• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:பெய்ஜிங் கட்டிடக் கலை
  2013-02-01 16:51:50  cri எழுத்தின் அளவு:  A A A   
1420ம் ஆண்டில் கட்டியமைக்கப்பட்ட சொர்க்கக் கோயில் அல்லது வானுலகக் கோயிலை மிங் வம்ச அரசர்களும் ச்சிங் வம்ச அரசர்களும் வானுலகுக்கு மதிப்பும், மரியாதையும் அளிக்கும் இடமாகவும், நல்ல விளைச்சலுக்காக இறை மன்றாடும் இடமாகவும் கருதினர். சொர்க்கக் கோயிலினுள்ளே அமைந்துள்ள ஒரு வட்ட வடிவ பீடத்தின் நடுவே உள்ள கல், வானுலகக் கல்லின் இதயம் என்றழைக்கப்படுகிறது. இந்த மேடையின் சிறப்பு என்னவென்றால் இங்கிருந்த பேசினால், சன்னமாக பேசினாலும், கனீரென்று குரல் எழும்புவதுதான். உண்மையில் இது அந்த கல்மேடையின் சிறப்பல்ல, இந்த வட்ட வடிவ பீடம் அமைந்த அறையின் அமைவும், அதன் சுவர்களுமே இந்த விந்தைக்கு பின்புலத்திலான காரணங்கள். சுவர்களுக்கும் இந்த மேடைக்குமிடை தூரம் மிகக் குறைவே. எனவே உண்மை குரலொலியும் அதன் எதிரொலியும் தெளிவாக பிரித்தறியமுடியாமல் போக, இரு ஒலிகளும் இணைந்து, சன்னமான குரலும் கம்பீரமாக தொனிக்கும்படி செய்து விடுகின்றன. இதை பற்றியெல்லாம் கடந்த முறை விரிவான தகவல்களை வழங்கினோம். இன்றைய நிகழ்ச்சியில் கோடைக்கால மாளிகையை பற்றிய தகவல்கள் உங்களுக்காக. ஆனால் கோடைக்கால மாளிகை பற்றி சொல்வதற்கு முன், சொர்க்கக் கோயிலின் தெற்கு வாயிலுக்கு அருகே அமைந்த விளக்குகளை பற்றிய சில தகவல்கள்.
1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040