கோடைக்கால மாளிகை
1873ம் ஆண்டு பேரரசி சிஷியின் 40வது பிறந்த நாளுக்கான பரிசாக, பேரரசர் தொங்ஷு வழங்கியதுதான் Yiheyuan கோடைக்கால மாளிகை. Yiheyuan என்றால் பேணிவளர்த்த இணக்கத்தின் பூங்கா என்று பொருள். முன்னதாக ஒரு பூங்காவாக இருந்த இடத்தை தன் பேரரசிக்கு அன்புப் பரிசாய் அளிக்கும் நோக்கில், சிறப்பாக வடிவமைத்து உருவாக்கினார் பேரரசர் தொங்ஷு. ச்சிங்யி பூங்காவாக இருந்த இடமே பின்னாளில் கோடைக்கால மாளிகையாக மாறியது. அருகேயுள்ள வான்ஷோ மலையிலிருந்து பார்க்கையில் கோடைக்கால மாளிகையினுள்ளே இருக்கும் குன்மிங் ஏரி, பீச் கனியின் வடிவத்தில் காணப்படும். கோடைக்கால மாளிகையினுள்ளே மையப்பகுதியில் காணப்படும் 41 மீட்டர் உயர கோபுரம், புத்த ஊதுவத்தி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோபுரத்தின் பக்கச்சுவர்களில் வவ்வாலின் இறக்கைகளை போன்ற அமைவுகள் காணப்படும். இதில் பீச் சீனாவில் நீடுவாழ் வாழ்க்கையின் சின்னமாகவும், வவ்வால்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையின் சின்னமாகவும் கருதப்படுகின்றன. இப்படி நீடுவாழ்க்கையும், மகிழ்ச்சியும் அடையாளங்களாக வெளிப்படும் அமைவில் கோடைக்கால மாளிகை காணப்படுவது தற்செயலாக நிகழ்ந்ததா? அல்லது பேரரசி சிஷுவுக்காக பேரரசர் தொங்ஷு அப்படியான அமைவையும், வடிவத்தையும் உருவாக்கச் செய்தாரா?