ஷாங்காயின் கிழக்கில் ஜேடுபுத்தர் கோவில் உள்ளது. புத்தரின் சிலைகள் அமர்ந்த நிலையிலும், வலது கையில் தன் தலையை தாங்கிபிடித்தபடி ஒருகளித்த நிலையில் இருக்கும் புத்தர் தன் சாந்தத்தாலும்,எல்லோர் மனங்களையும் வசிகரிக்கிறார். மலைமுகடுகளிலும், இங்கு ஏராளமான புத்தர் கோவில்கள் காணப்படுகிறது. கிழக்கு நாடுகளின் முத்துகோபுரம் புதாங் என்ற பூங்காவில் இருக்கிறது. 1536 அடி உயர இந்த கோபுரம் உலகின் மூன்றாவது உயர கோபுரமாகும். இந்த கோபுரத்தை பார்வையிட வசதியாக எலிவேட்டர் வசதியிருக்கிறது. இங்கு சென்று ஷாங்காயின் முழு அழகையும் கண்டு களிக்கலாம்.