மத்திய சீனாவின் ஹெனான் மாநிலத்தைச் சேர்ந்த புராதன நகரான லெவுயாங் நகரில் அமைந்துள்ள லாங்மன் கற்குகை சுமார் 1500 ஆண்டு கால வரலாறுடையது. லாங்மன் கற்குகை, லுயாங் புறநகரின் தெற்கிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் நேரெதிர் நிலையில் மலைகள் உள்ளன. நடுவில் ஈவு ஆறு ஓடுகின்றது.
எழில் மிக்க இயற்கைக் காட்சித் தலமான இவ்விடம் மக்களுக்கு ஏற்ற பருவ நிலை கொண்டது. கிழக்கு மற்றும் மேற்கு மலைகளின் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமுடைய கற்பாறையில் 2300க்கும் அதிகமான கற்குகைகள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கற்குகைகளுக்குள் 10 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தர் உருவச்சிலைகளைப் பண்டை காலச் சீனர்கள் செதுக்கினர். கி.பி.500ஆம் ஆண்டு காலப் பகுதியில், சீனாவின் பெய்வெய் வம்சக் காலத்து பேரரசர் புத்த மத நம்பிக்கையுடையவர். எவ்வளவு புத்தர் உருவச்சிலைகளைச் செதுக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு புத்தரின் அருள் ஆசி கிடைக்கும் என்று நம்பினார்.