• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லாங்மன் கற்குகை
  2013-04-22 11:10:09  cri எழுத்தின் அளவு:  A A A   

இதனால், அதிகமான புத்தர் சிலைகளைச் செதுக்க வேண்டும் அதனால் புத்தரின் ஆசி கிடைக்கும் என்று பெய்வெய் வம்ச காலப் பேரரசர் முடிவு செய்தார். லாங்மன் என்னும் இடத்தில் கற்பாறை தரமானதாகவும் சிலைகள் செதுக்க உகந்ததாகவும் இருந்ததால் 400க்கும் அதிகமான ஆண்டுகள் கால உழைப்பு மூலம் லாங்மன் குகைகளில் புத்த உருவங்கள் செதுக்கப்பட்டன. இக்கற்குகையிலுள்ள 90 விழுக்காட்டுக்கு மேலான சிறிய குகைகள் கி.பி.493 A.D. நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகளாக பெய்வெய் வம்சக் காலத்திலும் தொடர்ந்து தாங் வம்சக் காலத்திலும் செதுக்கப்பட்டன. இங்கு குகைகளுக்கு நடுவில் இருக்கும் சாக்கியமுனி புத்தாவும் அருகில் போதிசத்துவர்களின் சிலைகளும் இருக்கிறது. மேல்புர கூரை தாமரை வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஐந்து பெரிய புத்தரின் சிலைகளும், பக்கத்தில் போதிசத்துவரின் சிலைகளும், இருக்கிறது. வடக்குவெய் வம்ச காலத்தைப் பிரதிபலிக்கும் மற்றொரு கற்குகை இதுவாகும். இக்குகையில் புத்தர் உருவச்சிலைகள் பல உள்ளன. புத்தர் உருவச்சிலைக்கு முன் இவற்றைச் செதுக்கியவர்களின் பெயர், செதுக்கிய நாள், காரணம் ஆகியவை இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வடக்குவெய் வம்ச காலத்தில் நேர்த்தியான கையெழுத்துக்கள் மற்றும் சிறபக்கலையை ஆராய்வதற்கு இந்த தகவல்கள் உபயோகமாக உள்ளன.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040