மேலும், குவாங்தோங் கட்டிடத்தில் பிரதிநிதித்துவம் வாய்ந்த தியௌ லோவ் பற்றி உங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன். அது, அடுக்கு மாடி வீட்டின் கட்டமைப்பை காவல் கோபுரத்தின் காப்பு திறனுடன் இணைக்கும் கட்டிடமாகும். திருட்டு தவிர, வெள்ளப்பெருக்கத்தையும் அது தடுக்க முடியும். காய்பிங் நகரம் இந்த வகை கட்டிடத்துக்குப் புகழ்பெற்றது. கோபுரம் போன்ற இந்தக் கட்டிடம் மிகவும் உறுதியாக இருக்கிறது. அதன் நீர் இறைப்பு திறன் நன்றாக உள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், முதலாவது மாடி பாதிக்கப்பட்ட நிலையில், மேற்மாடியில் வசிக்க முடியும். தற்போது நிமிர்ந்து நிற்கும் இந்த கட்டிடங்கள், சுற்றுப்புறத்திலுள்ள புல், மலர், குளம் ஆகியவற்றுடன் இணைந்து, காய்பிங் நகரத்தில் மட்டுமே காணப்படக்கூடிய அருமையான காட்சியாக மாறியுள்ளன.
சரி நேயர்களே, இன்றைய கவர்ந்திழுக்கும் சீனா என்ற சிறப்பு நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. இக்கட்டுரை தொடர்பான இரண்டு வினாக்களை மறுபடியும் உங்களுக்கு கூறுகி்ன்றேன்.
1. உலகம் முழுவதிலும் 10 கோடிக்கு மேலானோர் Cantonese பயன்படுத்துகின்றனர். இந்த மொழி சீனாவின் எந்த மாநிலத்தில் பேசப்படுகிறது?
2. சீனாவிலிருந்து உலகிற்கு பரவிய முதலாவது இசை நாடகம் எது?
சரி நேயர்களே, கவர்ந்திழுக்கும் சீனா எனும் பொது அறிவுப் போட்டி தொடர்பான 4வது கட்டுரை முடிந்து விட்டது. நீங்கள் மின்னஞ்சல் அல்லது வான் அஞ்சல் மூலம் விடைகளை அனுப்புங்கள். இத்துடன் இன்றைய சிறப்பு நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. நாளை வழங்கப்படும் கடைசி கட்டுரையைக் கேட்கத் தவறாதீர்கள்.