கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்ச் சேவை, தொடக்கத்தில் நாள்தோறும் 30 நிமிட நேர சிற்றலைவரிசை நிகழ்ச்சிகளை வழங்கியதிலிருந்து, தற்போது சிற்றலைவரிசை, பண்பலை, இணையத்தளம், செல்லிடப்பேசிச் சேவை, தமிழொலி எனும் இதழ் முதலிய பல் ஊடக வடிவங்களுடைய முழு ஊடகப் பரப்பு மேடையாக உருவாகியுள்ளது. சீன வானொலி தமிழ்ச் சேவை இப்போது நாள்தோறும் 8 மணி நேர நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் 4 மணி நேர சிற்றலைவரிசை நிகழ்ச்சிகளும், இலங்கை கொழும்பில் பண்பலையில், 4 மணி நேர நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்படுகின்றன.
தமிழ் ஒலிபரப்பு வெளிநாடுகளில் மிக அதிக அளவில் நேயர்களைக் கொண்டுள்ளது. இதுவரை பதிவு செய்யப்பட்ட நேயர் சங்கத்தின் எண்ணிக்கை 350க்கும் மேலாகும். கடந்த சில ஆண்டுகளில் ஆண்டுதோறும் சுமார் 5இலட்சம் கடிதங்களைத் தமிழ்ச் சேவை பெற்று வருகிறது.
பாரம்பரிய ஒலிபரப்பின் மேம்பாடுகளை நிலைநிறுத்தியதோடு, தமிழ்ச் சேவை புதிய செய்தி ஊடக வளர்ச்சிக்கும் நலன் தரும் முறையில் முயற்சி மேற்கொண்டு, அதிகமான சாதனைகளைப் பெற்றுள்ளது.
2003ஆம் ஆண்டு டிசம்பர் சீன வானொலி தமிழ்ச் சேவையின் இணையத்தளம் திறக்கப்பட்டது. செழிப்பான உள்ளடக்கங்கள், சிறப்பான நிழற்படங்கள் ஆகியவற்றுடன், இணையத்தில் அது விரைவாக முனைப்புடன் காணப்பட்டு, பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. சி.பி மோகனின் சீனப் பயணம் எனும் சுற்றுலா பயணப் பதிவேடு, 100 இந்திய இளைஞர்கள் கலந்து கொண்ட இந்திய இளைஞர் நிழற்படப் போட்டி, சீனாவில் தமிழர் எனும் ஒளிப்பதிவுகள் முதலியவை, இணையத்தைப் பயன்படுத்துவோரின் பெரும் மதிப்பைப் பெற்றுள்ளன. 2013ஆம் ஆண்டு ஏப்ரல் செல்லிடப்பேசி இணையத்தளம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது. இந்திய பல்கலைக்கழகப் பண்பலைக்காகத் தயாரிக்கப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் இவ்வாண்டு ஒலிபரப்பப்பட்டது.