சீன நுண்கலைக் காட்சியகமும், சிங்குவா பல்கலைக்கழகமும் கூட்டாக நடத்தும் "மனித குடியிருப்பு கலை சூழல்:வூ லியாங் யூங் ஓவியம், நேர்த்தியான கையெழுத்து மற்றும் கட்டிடப் படைப்புகள் கலைக் கண்காட்சி" ஆகஸ்ட் 29ஆம் நாள் பெய்சிங் மாநகரிலுள்ள சீன நுண்கலைக் காட்சியகத்தில் நடைபெற்றது.
திரு வூ லியாங் யூங் 1922ஆம் ஆண்டு சீனாவின் நான் ஜிங் நகரில் பிறந்தார். அவர் புகழ் பெற்ற கட்டிடக் கலைஞர், நகர மற்றும் கிராமப்புறக் கட்டுமான திட்ட வரைவு நிபுணரும் கல்வியியலாளரும் ஆவார். சீனாவில் மனித குடியிருப்பு சூழல் அறிவியல் நிறுவுபவர் அவராவார். 21வது நூற்றாண்டின் துவக்கத்தில், மனித குடியிருப்பு சூழல் அறிவியல் என்ற கருத்தை அவர் முன்வைத்தார். மனித குடியிருப்புச் சூழல், மனிதரின் வாழ்க்கையை மையமாக கொண்ட அழகு மீதான பாராட்டு மற்றும் கலை உருவாக்கமாகும். இதனால், மனித குடியிருப்புச் சூழல் அழகு, நேர்த்தியான கை எழுத்து, இலக்கியம், ஓவியம், சிற்பம், கைத்திறன் கலை, நுண்கலை, கட்டிடக் கலை ஆகிய பல்வகை கலை வடிவ அழகின் ஒன்றிணைப்பு ஆகும் என்று திரு வூ லியாங் யூன் கருத்து தெரிவித்தார்.