சீன நுண்கலை காட்சியகத்தின் தலைமை காப்பாளர் ஃபன் டி அன் கூறியதாவது:
"திரு வூ, கட்டிடக் கலை, சுற்றுச்சூழல், வெளியிடம் ஆகியவற்றை, ஓர் அழகான ஓவியமாக வடிவமைக்கின்றார். அவர் சீன இயற்கைக் காட்சி ஓவியங்கள் மற்றும் மேலை நாட்டு ஓவியங்களில் இருக்கின்ற கலை அழகு காரணிகள் மற்றும் அழகு வடிவத்தை, கட்டிட வடிவமைப்புடன் ஒன்றிணைக்கின்றார். இதனால் கலை மற்றும் கட்டிடத் துறைகளை ஒன்றிணைக்கும் கலைஞர் அவராவார். இதனால் மனிதக் குடியிருப்பு கலைச் சூழல் என்ற தலைப்பிலான இக்கண்காட்சி, இக்காலத்தின் பண்பாட்டுக் கருப்பொருளாகும். இக்கண்காட்சி மூலம் கட்டிடப் பண்பாடு மற்றும் கட்டிட அழகியல் பற்றிய திரு வூவின் கருத்தை மேலும் பரந்துபட்ட அளவில் பரவல் செய்து, சீனக் கட்டிடக் கலை பற்றிய அவரது கருத்தை, தற்போதைய நகரம் மற்றும் புதிய கிராமப்புற உருவாக்கத்தின் மிக முக்கிய கல்வியியல் சிந்தனையாக கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றோம்" என்றார் அவர்.
திரு வூ லியாங் யூங், மனித குடியிருப்புச் சூழல் அறிவியல் தத்துவத்தை வெற்றிகரமாக பயன்படுத்தி, வட்டாரம், நகர மற்றும் கிராமப்புறம், கட்டிடம், தோட்டம் ஆகியவை மீது வரைவு, வடிவமைப்பு மற்றும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். "உலக மனித குடியிருப்பு விருது", "சர்வதேச கட்டிடக் கலைஞர் சங்க விருது", "ஆசிய கட்டிடக் கலைஞர் சங்க தங்க விருது" உள்ளிட்ட பல பெருமைகள் அவருக்கு சூட்டப்பட்டுள்ளன. 2011ஆம் ஆண்டு திரு வூ லியாங் யூங் "தேசிய உச்ச அறிவியல் தொழில் நுட்ப விருது" பெற்றார்.