வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ள சீனாவின் பல்வகை பண்பாட்டுக் குழுக்கள், சீனப் பண்பாட்டுப் பரவலின் பயனில் கவனம் செலுத்த வேண்டும் என்று சீனப் பண்பாட்டு அமைச்சகம் 2014ஆம் ஆண்டு வெளியிட்ட புதிய விதிகள் கோருகின்றன.
தவிர, சீன மக்களின் நாகரீகக் கல்வியறிவின் பண்பின் உயர்வு, சீனப் பண்பாட்டுச் செல்வாக்கை உயர்த்துவதற்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி, சீன மக்களின் வாழ்க்கை தரத்தின் உயர்வு ஆகியவற்றுடன், மேலதிக சீன மக்கள் வெளிநாடுகளில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். 2014ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல் நவம்பர் திங்கள் வரை, வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்ட சீனர்களின் எண்ணிக்கை, பத்து கோடியைத் தாண்டியுள்ளது. அவர்கள் வெளிநாட்டுப் பண்பாடுகளை அனுபவிக்கும் அதே வேளையில், சீன மக்கள் மற்றும் சீனப் பண்பாட்டின் தனிச்சிறப்புகளை உலக மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.
2014ஆம் ஆண்டு, சீனப் பண்பாடு மேலதிக தன்னம்பிக்கையுடன் உலகளவில் ஒளிவீசியுள்ளது. இது இதர நாகரீகத்துடன் இணைந்து, ஒன்றுக்கொன்று பரிமாற்றம் செய்து, கற்றுக்கொள்வதில் புத்தாக்கி வளர்ச்சியடைந்துள்ளது. அதே வேளையில், சீனா, உலகின் வல்லரசு முன்னணியில் சேரும் வரலாற்றுப் போக்கில், வல்லரசு தகுநிலைக்கு ஈடிணையாய்யிருக்கும் பண்பாட்டுத் தகுநிலையைப் பெறுவது என்பது, இன்னும் அதிக கடமைகளை எதிர்நோக்குகின்றது.