• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அழகான சீனா-2015 பட்டுப்பாதை சுற்றுலா ஆண்டு
  2015-04-02 09:41:27  cri எழுத்தின் அளவு:  A A A   

சி அன் நகர்

2014ஆம் ஆண்டு ஜூன் திங்கள், சீனா, கசகஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் கூட்டாக விண்ணப்பம் செய்த பட்டுப்பாதை திட்டப்பணி, உலக மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, உலகப் பண்பாட்டு மரபுச் செல்வமாக மாறியுள்ளது. பட்டுப்பாதை சுற்றுலாவின் பண்பாட்டு உள்ளடக்கத்தை மீண்டும் உயர்த்தியுள்ளது. எதிர்காலத்தில், இப்பட்டுப்பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுடனான சுற்றுலா ஒத்துழைப்பை எவ்வாறு முன்னேற்றுவது, அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. சீனத் தேசிய சுற்றுலா பணியகத்தின் சுற்றுலா முன்னேற்ற மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு பிரிவின் துணைத் தலைவர் லீ யா யிங் இது பற்றி கூறினார். 3 ஆண்டுகள் நீடிக்கும் சுற்றுலா புரப்புரை திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தரை மற்றும் கடல் வழிப் பட்டுப்பாதையின் நெடுகிலுள்ள சீனாவின் வட மேற்கு, வட கிழக்கு மற்றும் தென் மேற்கு பிரதேசங்கள், கடலோர பிரதேசங்கள், ஹாங்காங், மக்கெள, தைவான் மற்றும் சீனப் பெருநிலபகுதி ஆகியவற்றில் இத்திட்டம் பரவல் செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மேற்கூறிய திட்டத்தின்படி, பட்டுப்பாதையின் நெடுகிலுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மாநிலங்கள் இணைந்து, சர்வதேச சுற்றுலா நெறிகளை வரையத் துவங்கும். பட்டுப்பாதை சுற்றுலாவுக்கு சர்வதேச நேரடி பறத்தல் நெறிகளைத் திறந்து வைப்பதும், சுங்கத் துறை நடைமுறையை எளிதாக்குவதும் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளன. இனிமேல், பட்டுப்பாதையின் நெடுகிலுள்ள சீனாவின் பல்வேறு மாநிலங்கள், இப்பாதையின் நெடுகிலுள்ள பல்வேறு பிரதேசங்கள் மற்றும் நாடுகள் ஆகியவற்றுக்கிடையே தடையில்லா சுற்றுலா தொடங்கும். சீன மற்றும் அன்னிய பயணிகள், மேலும் வசதியாக பட்டுப்பாதை சுற்றுலாவின் ஈர்ப்பு ஆற்றலை அனுபவிப்பர்.


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040