பின்னர், ச்சாங் யு சியன் அம்மையார், பணி பயிலுனராக ஓர் ஆசிரியரிடமிருந்து தையல் தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்டார். பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை, அவர் தையல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். கத்தரிக் கோல், தையல் ஊசி, தையல் இயந்திரம் ஆகியவற்றின் துணையுடன் நாள்தோறும் அவர் வேலை செய்து வந்தார். இது, ச்சாங் யு சியன் அம்மையாரின் கலை நடைமுறை அனுபவத்தை பெரிதும் செழிப்பாக்கியுள்ளது. இதுவே பின்பு அவரது தாள் கத்தரிப்பு கலையின் உயர்வுக்கு அடிப்படையாகவும் அமைந்துள்ளது.
பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், ச்சாங் யு சியன் அம்மையார், அதே கத்தரிக் கோலை மீண்டும் பயன்படுத்தத் துவங்கினார். ஆனால் இந்த முறை, வாழ்க்கை நடத்துவதற்குப் பதிலாக, மனதின் அருமையான உளமார்ந்த ஆசைக்காக அவர் தாள் கத்தரிப்பினைச் செய்யத் தொடங்கினார். அவரது தாள் கத்தரிப்பு படைப்புகள், அதிக செய்தித்தாள்களிலும், இதழ்களிலும் வெளியிடப்பட்டு, நாட்டின் பல்வேறு பரிசுகளை வென்றெடுத்துள்ளன. பின்னர், ச்சாங் யு சியன் அம்மையார், சீனாவின் புகழ் பெற்ற தாள் கத்தரிப்பு கலைஞர் மு செங் கேவிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளதால், அவரது தாள் கத்தரிப்பு நுட்பம் விரைவாக உயர்ந்துள்ளது. தவிர, மேலும் படவடிவங்கள் பற்றிய சிந்தனைகள், அவரது படைப்புகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ச்சாங் யு சியன் அம்மையார் கூறியதாவது:
"முன்பு, நாட்டுப்புற நடையுடைய பாவனைகளை வெளிப்படுத்தும் தாள் கத்தரிப்பு வடிவங்களை மட்டுமே செய்ய முடிந்தது. பின்பு, நபர்கள், மலர்கள், புற்கள், பூச்சிகள், மீன்கள் முதலிய உருவங்களை தாளில் கத்தரிக்க கற்றுக்கொண்டேன். இரு வகை பாவனைகள் இணைக்கப்பட்டு, தனிச்சிறப்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இது, எனது தாள் கத்தரிப்பு பாணியாக மாறியுள்ளது" என்றார், அவர்.
ச்சாங் யு சியன் அம்மையாரின் தாள் கத்தரிப்பு படைப்புகளில் அதிக தனிநபர்களின் உருவங்கள் இடம்பெறுகின்றன. சில சமயங்களில், கத்தரிக்கோலைப் பயன்படுத்தி, அந்நபரின் மனநிலையை வெளிப்படுத்த வேண்டும். இது மிகவும் கடினமானது. ஆனால் அதுவே ஒரு படைப்பின் வெற்றி அல்லது தோல்விக்கும் முக்கியமானதாக அமைகிறது என்று Zhang Yue Xian அம்மையார் கூறினார்.