• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவிலும் சீனாவிலும் கச்சா எண்ணெய் விலை குறைவினால் ஏற்படும் தாக்கம்
  2015-03-16 16:07:41  cri எழுத்தின் அளவு:  A A A   

 

 தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் எண்ணெய் அளவில் சுமார் 80 விழுக்காடு இறக்குமதி செய்யப்படுகிறது. எண்ணெய் விலை குறைவினால், இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெய் விலையும் குறையும். இது ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையேயான நாணய பற்றாக்குறையை வெகுவாக் குறைக்கும். இதன்மூலம், பணவீக்கமும் குறையும். இதனால், இந்தியப் பொருளாதாரத் துறையில் முன்னேற்றம் காண முடியும் என்றும், இருந்த போதிலும் பலரும் எதிர்ப்பாப்பது போல, கச்சா எண்ணெய் வீழ்ச்சியினால் இந்திய பொருளாதாரம் விரைவில் மீட்சி பெறாது என்றும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாக உள்நாட்டு எண்ணெய் சந்தையை நிதானப்படுத்தும் வகையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்திய அரசு பெரும் தொகை மானியம் அளிக்கின்றது. ஆகவே, உலக கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் பெரிய ஏற்றத்தாழ்வு, இந்திய பொருளாதாரத்தில் விரைவான தாக்கத்தை ஏற்படுத்தாது. இம்முறை விலை குறைவு 2016ஆம் ஆண்டு வரை தொடரும் பட்சத்தில், அரசின் நிதிப்பற்றாக்குறை குறையும் என்று கிரிடிட் சூசி ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டது.

வேறு ஒரு மறைமுக பாதிப்பு பற்றி கவனிக்க வேண்டும். அதாவது, விலை குறைவினால், கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் அதற்குரிய பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அந்நாடுகளின் நுகர்வு குறையவும், அது இந்தியாவின் ஏற்றுமதியை பாதிக்கவும் வாய்ப்புள்ளது.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040