• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவிலும் சீனாவிலும் கச்சா எண்ணெய் விலை குறைவினால் ஏற்படும் தாக்கம்
  2015-03-16 16:07:41  cri எழுத்தின் அளவு:  A A A   

மேலும், அந்நாடுகள் பிற நாடுகளில் முதலீடு செய்யும் தொகையை குறைக்க நேரிடும். குறிப்பாக இந்தியா போன்ற நாடுகள் பிற நாடுகளின் முதலீடுகளை அதிகம் நம்பி உள்ளன.

இக்காரணங்களால் கச்சா எண்ணெய் விலை குறைவு ஏற்பட்டுள்ளபோதும், அதன் பலன் இந்தியாவுக்கு விரைவில் கிடைக்காது என நிபுணர்கள் கூறுவதற்குரிய ஒரு காரணமாகும்.

அடுத்து, உலகளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி சீனாவில் ஏற்படும் தாக்கத்தைப் பார்ப்போம்.

தற்போது சீனாவில் பயன்படுத்தப்படும் எண்ணெய் அளவில் சுமார் 60 விழுக்காடு இறக்குமதி செய்யப்படுகிறது. பீப்பாய்க்கான விலை 10 அமெரிக்க டாலர் குறைந்த நிலைமையில், நாளுக்கு 60 இலட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால், நாளுக்கு 6 கோடி அமெரிக்க டாலர் செலவைத் தவிர்க்கலாம்.

நடைமுறையில் எண்ணெய் விலை, மக்களின் வாழ்க்கையுடன் நெருக்கமாகத் தொடர்புடையது. அன்றாடப் பொருட்களின் விலையில் சரக்குப் புழக்கம் செலவு ஒரு முக்கிய பங்காகும். மின்னணு உற்பத்தி பொருட்கள், வேளாண் உற்பத்தி பொருட்கள், ஆடை முதலிய உற்பத்தி பொருட்களின் தயாரிப்பு செலவு எண்ணெய் விலையின் வீழ்ச்சியுடன் குறையும். ஆகவே, எண்ணெய் விலை குறைவு உள்நாட்டு நுகர்வு சந்தைக்கு பலன் வழங்கும் என்று நம்பப்படுகிறது. அதேவேளையில், பயணியர் விமானச் சேவை, சரக்கு போக்குவரத்து, கட்டுமானம் முதலிய துறைகளின் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காணப்படுவது உறுதி.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040