கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 60 அமெரிக்க டாலருக்குள் குறைந்தால், சந்தைப்போட்டியில் புதிய எரியாற்றல் துறை தனது மேம்பாட்டை முற்றிலும் இழக்கும். ஆகவே இத்துறையின் வளர்ச்சி வீழ்ச்சி நிலைக்கு சிக்கிக்கொள்ளும் என்று எரியாற்றல் துறையில் ஆராய்வாளர் ஒருவர் கூறினார்.
இந்நிலையில் பல்வேறு எண்ணய் நிறுவனங்களும் புதிய எரியாற்றல் நிறுவனங்களும் கவனமாக ஆராய்ந்து தங்களது வளர்ச்சி திசையை மேம்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் முன்மொழிந்துள்ளனர்.
உலக கச்சா எண்ணெய் விலை குறைவைக் கையாள, வெவ்வேறான நாடுகள் வெவ்வேறான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ரஷிய மத்திய வங்கி விரைவாக வங்கி வட்டியை அதிகரித்துள்ளது. உள்நாட்டு தேவைக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று தென் கொரியா தெரிவித்துள்ளது. பிரிட்டனில் எண்ணெய் நிறுவனங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளன. சீனா எண்ணெயின் நுகர்வு வரியை அதிகரித்துள்ளது. நடைமுறையில் எரியாற்றல் பயன்பாட்டைக் குறைப்பது தான் சரியானதாகும் அல்லவா?