2009ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் நாள் இரவு, நவ சீனா நிறுவப்பட்டதன் 60ஆம் ஆண்டு நிறைவு விழாவில், தில்பெர் யூனுஸ் அம்மையாரும், தெய் யூ சியாங்கும் "சீன அணிவகுப்பு" என்ற பாடலைக் கூட்டாக பாடினர். உற்சாகம் தரும் தாளம் மற்றும் இனிமையான பாட்டொலியுடன், சிங்கியாங்கைச் சேர்ந்த தில்பெர் யூனுஸ் அம்மையார், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். இசை நாடக அரங்கில் தமது நடிப்பை சீனப் பார்வையாளர்கள் கண்டு ரசிக்கச்செய்யும் பொருட்டு, ஓர் உண்மையான சீன இசை நாடகத்தில் நடிக்க அவர் எப்போதும் விரும்புகிறார். கோலாகலமான மிகையான மணமுடைய "மலை கிராமத்தில் ஓர் ஆசிரியை" என்ற இசை நாடகத்தில் நடிக்குமாறு தன்னை சீன தேசிய அரங்கேற்ற கலை மையம் அழைத்த போது, தில்பெர் யூனுஸ் அம்மையார் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். குறிப்பாக இசை நாடகத்தில் ஒரு இனிமையான வரியின் தாளத்தைச் சோதனை முறையில் பாடிய போது, மேலை நாட்டு முன்னணி இசை நாடகங்களின் பாணியை இத்தாளம் ஒத்தது என்று அவர் உணர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:
"இந்த சமூகத்தில் ஒரு குழுவினர், அதாவது மலைக் கிராமங்களில் வேலை செய்யும் ஆசிரியைகளைப் புகழ்ந்து போற்ற வேண்டும். நாட்டுக்காக அடுத்த தலைமுறையினர்களை வளர்க்க, அவர்கள் பலவற்றை இழக்கின்றனர். அவர்களுக்கு மதிப்பு அளித்து, அவர்களின் எழுச்சியைப் பரவல் செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார்.
புகழ் பெற்ற இசை நாடக நடிகராக, தில்பெர் யூனுஸ் அம்மையார் உலகின் பல்வேறு இடங்களில் அடிக்கடி அரங்கேற்றி தனது திறமையை வெளிகொணர்கின்றார். நேர வேற்றுமைகள் தரும் சிக்கலைத் தவிர, தமது குடும்பத்தினருடன் இணைந்திருக்கும் நேரத்தையும் அவர் இழக்கிறார். இசை நாடக லட்சியத்தில் வெற்றி பெறும் வேளையில், அவரது திருமண வாழ்க்கையில் மனநிறைவின்மையும் சிக்கலும் நிலவியது. ஆனால், அவர் நம்பிக்கையுடன் அவற்றை எதிர்கொண்டு ஆர்வத்துடன் சமாளித்தார். அரங்கில் இன்முகத்துடன் தனது சொந்த நிலையை மறைத்து, ரசிகர்களுக்கு அவர் மகிழ்ச்சியை தருகிறார். பொது மக்கள் இதைப் புரிந்து கொள்வது கடினம்.
வயது ஆக ஆக, அமைதியான வாழ்க்கை நடத்த தில்பெர் யூனுஸ் அம்மையார் மிகவும் ஆசைப்படுகிறார். அரங்கேற்றுமாறு தமக்கு விடுத்த அதிக அழைப்புகளை அவர் பணிவோடு மறுத்திருக்கிறார். சீனாவுக்குத் திரும்பி, வாழ்க்கை நடத்த வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். என்றாவது ஒரு நாள், தாம் அரங்கில் இசை நாடகத்தில் நடிப்பது பொருத்தமில்லை என்று உணர்ந்தால் தான் தொடர்ந்து நடிக்கப்போவதில்லை என்று அவர் புன்சிரிப்போடு கூறினார்.