இப்போது, அஜிலங்கிற்கு 5 மாணவிகள் இருக்கின்றனர். அனைவரும் ஒரே வட்டத்திலுள்ள எலுன்ச்சுன் இன பெண்களாவர். மாணவிகள் தமது கைவினை நுட்பத்தின் மீது பெரும் அக்கறை கொண்டுள்ளதால் சில ஆண்டுகளுக்குள் இந்த அடிப்படையை கற்றுத் தேர்ந்துள்ளனர் என்பது முதியவருக்கு மகிழ்ச்சி தந்தது.
மேலும் அதிகமான எலுன்ச்சுன் இனத்தவர்கள், இக்கைவினை நுட்பத்தைக் கற்றுக்கொள்ளுமாறு ஊக்கமளிக்கும் வகையில், உள்ளூர் அரசு வட்டத்தின் பெரும் மண்டபத்தில் பயிற்சி வகுப்பை நடத்தியுள்ளது. முதியோர் அஜிலங், இப்பயிற்சி வகுப்பின் ஆசிரியராக, அங்குள்ள பெண்களுக்கு கைவினை நுட்பத்தை கற்றுக் கொடுக்கின்றார்.
கடந்த சில ஆண்டுகளில் டொசாமி வட்டத்தில் சுற்றுலாத்துறை வளர்ந்துள்ளது. வெளியூர் பயணிகள் பூர்ச்ச மரப்பட்டையாலான கைவினைப் பொருட்களை விரும்பி வாங்கியுள்ளனர். இந்நுட்பம், உள்ளூர் பொருளாதாரத்தின் வளர்ச்சியைத் தூண்டியுள்ளது.