• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குவாங் சி சுவாங் இன தன்னாட்சிப் பிரதேசத்தின் பாடல் அரங்கு
  2015-07-17 15:13:13  cri எழுத்தின் அளவு:  A A A   

பாடல் அரங்கு என்பது, தென் மேற்கு சீனாவின் குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சி பிரதேசத்தின் நாட்டுப்புற பாரம்பரிய நிகழ்ச்சியாகும். அன்றி, சுவாங் இன தனித்தன்மை வாய்ந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும். பாடல் அரங்கில், நாட்டுப்புற பாடல்கள் முக்கியமாக இடம்பெறுகின்றன. அதே வேளையில், ஏராளமான பிற நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இன்றைய நிகழ்ச்சியில், சுவாங் இனத்தின் வூ மிங் மாவட்டத்தில் உள்ள பாடல் அரங்கை நேரில் உணர்ந்து கொள்வோம்.

குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தென் மற்றும் மத்திய பகுதியில் அமைந்துள்ள இம்மாவட்டம், சுவாங் இனப் பண்பாடு தோன்றிய இடங்களில் ஒன்றாகும். நீண்டகால வரலாற்றுப் போக்கில், அடர்த்தியான சுவாங் இன தனித்தன்மை உடைய பாடல் அரங்குப் பண்பாடு, வூ மிங் மாவட்டத்தில் உருவாயிற்று.

வூ மிங் மாவட்டத்தின் சியாங் சன் பூங்கா சதுக்கத்தில், சுமார் நூறு சுவாங் இன இளைஞர், இளம்பெண்கள், அழகான நீல தேசிய இன ஆடைகளை அணிந்து மூவர் அல்லது ஐவர் குழுவாகி, ஒருவருடன் ஒருவர் நாட்டுப்புறப்பாடலைப் பாடுகின்றனர். பாட்டொலி அங்கும் இங்குமாக எழும்ப, சதுக்கம் முழுவதும் பாட்டுக் கடலாகியது. 

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040