பாடல் அரங்கில், நாட்டுப்புறப்பாடலைப் பாடுவது, அதிமுக்கியமானது. தவிர, சுவாங் இன இளைஞர், இளம்பெண்கள் பலர், மூங்கில் தடி நடனம் உள்ளிட்ட, தேசிய இன சிறப்பியல்புடைய நிகழ்வுகளிலும் கலந்து கொள்கின்றனர்.
இவை போக, சில சுவாங் இனத்தவர்களின் வீட்டில் வெவ்வேறான நடவடிக்கைகள் நடைபெற்றன. எடுத்துக்காட்டாக, சுவையான உணவுப் பொருட்களை தயாரித்து, நெருங்கிய நண்பர்களுடன் தரமான மது அருந்தி, ருசியான உணவுகளை உட்கொள்கின்றனர். மேலே கூறப்பட்டது, வூ மிங் மாவட்ட விவசாயி சு சியே ஜிங் செய்தியாளரிடம் அறிமுகப்படுத்தியது. பின்னர், அவர் கூறியதாவது:
"எங்கள் தேசிய இனத்தின் பழக்க வழக்கங்களின் படி, ஒவ்வொரு குடும்பமும் ஐந்து நிற பசை அரிசி சோறு தயாரிக்க வேண்டும். அன்றி, கோழி-வாத்துக் கறிகளை சமைக்க வேண்டும். இப்போதும், சுவாங் இன மக்கள், முந்தைய சிறந்த பாரம்பரியங்களை நிலைநிறுத்தியுள்ளனர்" என்றார்.
சுவையான உணவுகள் தவிர, பாடல் அரங்கில், தரமான மதுவும் இன்றியமையாதது. பாட்டு மன்னர் மங் சுயே சன், செய்தியாளரிடம் கூறியதாவது:
"பாடல் அரங்கு நாட்களில், அனைவரும் பாடுவார்கள். மது குடிப்பார்கள். அதிகமான விருந்தினர்கள் வந்தால், அக்குடும்பத்துக்கு மிகப் புகழ். வருவோர் அனைவருக்கும் மது உண்டு. மது அருந்திய பின், பாடுவார்கள். விடியற்காலை வரை இது தொடரும்" என்றார்.